தமிழகம் முழுவதும் 563 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை விதிப்பு!

கோவை: தமிழகம் முழுவதும் 4.28 கோடி ரூபாய் மதிப்பில், 563 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் 4.28 கோடி ரூபாய் மதிப்பில், 563 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானிய பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யவுள்ள நிலையில், விதையின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், ஆய்வு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் 17 ஆயிரத்து 848 ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்ட பல்வேறு பயிர்களில் இருந்து, 9,779 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவை பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 4.28 கோடி ரூபாய் மதிப்புள்ள, 563 மெட்ரிக் டன் விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் சுப்பையன் கூறுகையில், ''தரமற்ற விதை உற்பத்தி செய்தவர்கள், விற்பனையாளர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதை உற்பத்தியாளர்கள், உரிய விற்பனை பட்டியல் மற்றும் பகுப்பாய்வு முடிவுகளுடன் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். உரிமம் பெற்ற நிலையங்களில் மட்டுமே, விவசாயிகள் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த விற்பனை பட்டியலை அறுவடை காலம் முடியும் வரை வைத்திருக்கவேண்டும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...