தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதம் வைத்திருந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்பு: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை..!

கோவை: தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதம் வைத்திருப்பவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் எச்சரித்துள்ளார்.


கோவை: தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதம் வைத்திருப்பவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் எச்சரித்துள்ளார்.



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெண்களுக்கான உதவி மையம் கோவை மாநகர காவல்துறை சார்பாகத் தொடங்கப்பட்டது. இதில், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றங்களை விசாரிக்கும் வகையில், காவல்துறை சார்பாக பெண்களுக்கான பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.



முதல்கட்டமாக இந்த மையத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது அவுட்டுக்காய் போன்ற வெடி பொருட்கள் தயாரிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் காவல் துறையினர்க்கு தகவல் அளிக்க வேண்டும்'' என கேட்டு கொண்ட அவர் மேலும், “தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்'' என கூறியதோடு, “தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்'' என உறுதியளித்தார். தொடர்ந்து அவர், ஆயுத கலாசாரத்தை ஒழிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்வதாகவும், இதுவரை எட்டு வழக்குகள் பதியப் பெற்று சுமார் 13 துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தகுந்த உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.



பயிற்சி முகாமில், மகளிர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...