நெகமம் பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவை: பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் நாராயண நாயக்கன் புதூரை சேர்ந்தவர் 19 வயதான சூர்யா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே, நான்கு நாட்களுக்கு முன்பு இவரது சகோதரரும், தாயும் அவர்களது சொந்த ஊரான மதுரை வைரவ பட்டிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, சூர்யா வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சூர்யாவின் நண்பர் சூர்யாவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போது, கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. மேலும் வெகுநேரமாக அழைத்துப் பார்த்தும் எந்தவித பதிலும் வரவில்லை.

மேலும், துர்நாற்றம் வீசியதை கண்டு கதவின் துவாரம் வழியே உள்ளே பார்த்துள்ளார். அப்போது சூர்யா சடலமாக கிடந்தது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததைடுத்து, அங்கு விரைந்த நெகமம் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...