கோவை: பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் 36,270 பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் 36,270 பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள தப்பட்டை கிழவன் புதூர் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் எஸ்எஸ்ஐ சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மீனாட்சி புரத்தைச் சேர்ந்த 32 வயதான பிரகாஷ், 25 வயதான சரவணகுமார், பெரிய போதுவை சேர்ந்த 27 வயதான சக்திவேல், திவன்சாபுதூரை சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார், கிழவன்புதூரை சேர்ந்த 27 வயதான பசுபதி, வீரப்பகவுண்டனூரை சேர்ந்த 20 வயதான நாகராஜ், 23 வயதான ரமேஷ், கருமாண்டகவுண்டனூரை 25 வயதான பார்த்திபன் என 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 36,270 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள தப்பட்டை கிழவன் புதூர் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் எஸ்எஸ்ஐ சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மீனாட்சி புரத்தைச் சேர்ந்த 32 வயதான பிரகாஷ், 25 வயதான சரவணகுமார், பெரிய போதுவை சேர்ந்த 27 வயதான சக்திவேல், திவன்சாபுதூரை சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார், கிழவன்புதூரை சேர்ந்த 27 வயதான பசுபதி, வீரப்பகவுண்டனூரை சேர்ந்த 20 வயதான நாகராஜ், 23 வயதான ரமேஷ், கருமாண்டகவுண்டனூரை 25 வயதான பார்த்திபன் என 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 36,270 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.