வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு!

கோவை: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்தும் கூழாங்கல் ஆற்றின் வழியாக சோலையார் அணைக்கு செல்கிறது.

கூழாங்கல் ஆற்றில் இன்றைய காலை 6 மணி நிலவரப்படி 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் சோலையார் அணைக்கு சென்று கொண்டுள்ளது. கூழாங்கல் ஆற்று பகுதி ஒரு சுற்றுலாத் தலமாகும். இதன் காரணமாக இந்த ஆற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும், வால்பாறை நகரை ஒட்டி உள்ளதால் பொதுமக்களும் துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் இந்த ஆற்றை பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே, வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் கூழாங்கல் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...