கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவைச் சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் கோவை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவைச் சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் கோவை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.