முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த பதிவுகளைக்காட்டி சமூக வலைத்தளங்களில் முட்டிக்கொள்ளும் இளைஞர்கள்


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜெயலலிதா-வின் உடல்நிலை குறித்து பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், முதல் அமைச்சர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பேசப்பட்ட தலைப்புகளில் (டிரெண்டிங்) ஜெயலலிதாவின் பெயர் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர், முதல் அமைச்சர் உடல் நிலை குறித்த அவதூறான தகவல்களை  பதிவேற்றி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்க்கும் ஜெயலலிதா நலம் விரும்பிகள் கொதிப்படைந்து பதிவிட்ட  அந்த நபரை திட்ட, பதிலுக்கு எதிர்தரப்பில் இருந்தும் தாறுமாறான வார்த்தைகள் வெடிக்க இரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...