ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி துவக்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புகள் குறித்து மூன்று நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-

இந்நாட்டில் பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவிகிதம் உள்ளனர். ஆனால், அவர்கள் சமூகத்தில் வன்முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீது தினிக்கப்படும் ஒடுக்குமுறையால் அவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணையாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் யாரையேனும் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.



பெண்களாக நாம் மிகவும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது என்பது உடல் ரீதியிலான பிரச்சனைகளில் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதுகாத்துக்கொள்வது ஆகும்'' என்றார்.

அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறியதாவது:-

பெண்களுக்கு அவர்களது தன்மானம் மிகவும் முக்கியம். இவ்வுலகில் ஒரு பெண்ணால் முடியாதது வேறு யாராலும் முடியாது. கடவுளின் படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.

இதுகுறித்து நமது நிருபருக்கு லதா சுந்தரம் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், 

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது இக்காலத்தின் கட்டாயம். பெண்கள் என்று தாங்களாகவே பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு அவதிப்படுகின்றனர். இந்த பயிற்சியானது பெண்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர் டி.சிவகுமார், கோகுலராஜ், விவேக் ஆகியோர் மாணவிகளுக்கு தற்காப்புகள் குறித்த பயிற்சி அளித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...