தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான 'உங்கள்‌ தொகுதியில்‌ முதல்வர்‌' திட்டத்தின் மீதான நடவடிக்கைகள்..!

கோவை: “உங்கள்‌ தொகுதியில்‌ முதல்வர்‌” திட்டத்தில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, காவல் துறை தலைமை இயக்குநர் இன்று முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டார்.


கோவை: “உங்கள்‌ தொகுதியில்‌ முதல்வர்‌” திட்டத்தில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, காவல் துறை தலைமை இயக்குநர் இன்று முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டார்.

காவல் துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள முக்கிய செய்திக் குறிப்பில்,

“மாண்புமிகு தமிழக முதல்வரின்‌ சிறப்பு திட்டமான “உங்கள்‌ தொகுதியில்‌ முதல்வர்‌” திட்டத்தில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து 1594 மனுக்கள்‌ காவல்துறையில்‌ பெறப்பட்டன. இந்த மனுக்களில்‌ 244 மனுக்கள்‌ நீதிமன்றம்‌ மற்றும்‌ வேறு துறை மூலம்‌ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால்‌ புகாரதாரருக்கு தகவல்‌ தெரிவிக்கப்பட்டு சம்மபந்தபட்ட துறைக்கு அனுப்பி வைத்து மனுக்கள்‌ மீது விசாரணை முடிக்கப்பட்டது.

மீதம்‌ உள்ள 1350 மனுக்களில்‌, 14.07.2021 வரை 838 மனுக்கள்‌ மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில்‌, பணம்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌ தகராறு தொடர்பாக 291 மனுக்களும்‌, சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும்‌, சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்தக்‌ கோரி 70 மனுக்களும்‌, காவல்‌ நிலைய சேவைகள்‌ வேண்டி 51 மனுக்களும்‌, குடும்பத்‌ தகராறு தொடர்பாக 58 மனுக்களும்‌, இதர காரணங்களுக்காக 190 மனுக்களும்‌ அடங்கும்‌.

நிலுவையில்‌ உள்ள 42 மனுக்கள்‌ மீது விசாரணை நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டு இன்னும்‌ சில நாள்களுக்குள்‌ தீர்வு கண்டு முடித்து வைக்கப்படும்‌.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...