பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை கடத்த முயன்றவர் கைது..!

கோவை: பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசியை பெற்றுக் கொண்டு, சிலர் திப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் குடோனில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு கடத்க்ச் சென்று விற்பனை செய்வதாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



அதன்படி, இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் திப்பம்பட்டி பகுதியிலுள்ள சந்தேகத்துக்கிடமான குடோனில் அதிரடி ஆய்வு நடத்திய போது, அங்கு பல்வேறு பெயர்களில் மூட்டை மூட்டையாக சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அங்கிருந்த ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது தவ்ஃபிக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகம்மது தவ்ஃபிக் என்பவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி பெற்றுக்கொண்டு அதை பல்வேறு பெயர்களில் மூட்டையாகக் கட்டி கேரளாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்தது.



இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் கோமங்கலம் காவல் துறையிடம் புகார் தெரிவித்ததை அடுத்து நியாய விலைக் கடை அரிசியை குடோனின் வைத்து கேரளாவுக்கு கடத்திய முகமது தவ்ஃபிக்கை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...