நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லநள்ளி ஜோதி நகர் பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லநள்ளி ஜோதி நகர் பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர் என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்திற்குப் பின் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரிழந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர் என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்திற்குப் பின் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரிழந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.