கோவை: பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை, ஆழியாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதில் குரங்கு அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவரகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், (கவியருவி) குரங்கு அருவியில் இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவித்த போதிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை, ஆழியாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதில் குரங்கு அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவரகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், (கவியருவி) குரங்கு அருவியில் இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவித்த போதிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.