பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ராதிகா தலைமையில் பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கொட்டும் மழையை பொருட்படுத்தாத பெண்கள், கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு மாதர் சங்க செயலாளர் ராதிகா அளித்த பேட்டியின்போது, கேஸ் விலை உயர்வால் வங்கியில் மானியத் தொகை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, உயர்ந்து கொண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...