கோவை மாணவர் ஆன்லைன் பாடம் படிக்க செல்போன் இல்லாததால் தற்கொலை..!

கோவை: ஆன்லைன் மூலமாக பாடம் படிக்க செல்போன் வசதி இல்லாததால் பிளஸ் 1 மாணவர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஆன்லைன் மூலமாக பாடம் படிக்க செல்போன் வசதி இல்லாததால் பிளஸ் 1 மாணவர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகா புரத்தைச் சேர்ந்த பாண்டி கூலித்தொழிலாளி. இவரது மகன் அருள்செல்வம் வயது 15. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், அருள் செல்வம் வீட்டில் இருந்தபடி பாடம் படித்துவந்தார். தற்போது ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அருள்செல்வம் தனது தந்தையிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை இரண்டு நாள் கழித்து வாங்கித்தருவதாக கூறினார்.

இதனால், அருள் செல்வம் மிகுந்த மனவேதனை அடைந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதுகுறித்து துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...