திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர்.நகர் பகுதியில் ஓடை புறம்போக்குக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகக் கட்டப்பட்டிருந்தன. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே, அவற்றை அப்புறப்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களால் அவை அகற்றப்படாத நிலையில், இன்று மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை இடித்து பொருட்களை அப்புறப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தினர்.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஏற்கெனவே அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டு அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து கட்டடங்கள் இடிக்கப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர்.நகர் பகுதியில் ஓடை புறம்போக்குக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகக் கட்டப்பட்டிருந்தன. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே, அவற்றை அப்புறப்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களால் அவை அகற்றப்படாத நிலையில், இன்று மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை இடித்து பொருட்களை அப்புறப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தினர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஏற்கெனவே அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டு அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து கட்டடங்கள் இடிக்கப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.