கோவை: வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 122 அடியை தாண்டியது.
கோவை: வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 122 அடியை தாண்டியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையார் அணை உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் மற்றும் கீழ் நீரார் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையார் அணை நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலையில் 123 அடியாக உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, மேல் நீரார் அணையில் 89 மி. மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 53.மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 41 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 38 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சோலையார் அணைக்கு 2822.33 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவர்ஹவுஸ் 1-க்கு 407.51 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-க்கு 445.06 கன அடி நீர் என மொத்தம் 852.57 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், 165 அடி உயரமுள்ள அணையில் நீர்மட்டம் 122.73 அடியாக உள்ளது. சோலையார் அணையின் நீர்வரத்து பகுதியான கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் சோலையார் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையார் அணை உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் மற்றும் கீழ் நீரார் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையார் அணை நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலையில் 123 அடியாக உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, மேல் நீரார் அணையில் 89 மி. மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 53.மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 41 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 38 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சோலையார் அணைக்கு 2822.33 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவர்ஹவுஸ் 1-க்கு 407.51 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-க்கு 445.06 கன அடி நீர் என மொத்தம் 852.57 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், 165 அடி உயரமுள்ள அணையில் நீர்மட்டம் 122.73 அடியாக உள்ளது. சோலையார் அணையின் நீர்வரத்து பகுதியான கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் சோலையார் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.