கோவை: கோவையில் கிரிக்கெட் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலால் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் கோவை ஜே.எம் -2 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
கோவை: கோவையில் கிரிக்கெட் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலால் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் கோவை ஜே.எம் -2 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் தனது தம்பி சூர்யாவைத் தாக்கியதாகக் கூறி கடந்த 8ஆம் தேதி செல்வா என்பவரை கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவரும் மது போதையில் இருந்த நிலையில் கார்த்திக், செல்வாவை அவதூறாகப் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வா தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக செல்வா உள்பட 7 பேர் 5 பைக்குகளில் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை தேக்ச் சென்றனர்.
உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே இருந்த கார்த்தியைக் கண்டதும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்க்ச் சென்றனர். இதுகுறித்து சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய பீளமேடு புதூரைச் சேர்ந்த அரவிந்த்(20) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கும்பலை போலீஸார் தேடிவந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான செல்வப்பெருமாள், மனோஜ், நந்தகோபால், ஜெயராஜ், பிரவீன், அஸ்வின் ஆகிய 6 பேர் இன்று கோவை ஜே.எம்-2 குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் தனது தம்பி சூர்யாவைத் தாக்கியதாகக் கூறி கடந்த 8ஆம் தேதி செல்வா என்பவரை கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவரும் மது போதையில் இருந்த நிலையில் கார்த்திக், செல்வாவை அவதூறாகப் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வா தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக செல்வா உள்பட 7 பேர் 5 பைக்குகளில் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை தேக்ச் சென்றனர்.
உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே இருந்த கார்த்தியைக் கண்டதும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்க்ச் சென்றனர். இதுகுறித்து சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய பீளமேடு புதூரைச் சேர்ந்த அரவிந்த்(20) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கும்பலை போலீஸார் தேடிவந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான செல்வப்பெருமாள், மனோஜ், நந்தகோபால், ஜெயராஜ், பிரவீன், அஸ்வின் ஆகிய 6 பேர் இன்று கோவை ஜே.எம்-2 குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.