கோவை: கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனையொட்டி, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை கூடாரம் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது அகற்றப்பட்டது.
கோவை: கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனையொட்டி, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை கூடாரம் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது அகற்றப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் உக்கிரமாக தாக்கிய நிலையில், கோவையில் தமிழகத்திலேயே அளவுக்கு அதிகமான எண்ணிக்கை காணப்பட்டது. அதனால் அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொரோனா சிகிச்சை அளிக்க தங்களுடைய இடங்களை கொடுத்து உதவினார். சமூக சேவை அமைப்பினர் தங்களுடைய திருமண மண்டபங்கள் உட்பட அரசு கலைக் கல்லூரிகள், கொடிசியா வளாகம், ரயில் பெட்டிகள் என அனைத்தும் கொரோனா உடைய சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.
இதனால் கோவையில் பல்வேறு விதமான அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தது. இதுபோக கஷ்டப்படக் கூடிய மக்களிலிருந்து உயர்பதவியில் இருக்கக்கூடியவர்கள் வரை கூட கொரோனா விட்டுவைக்கவில்லை. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்கள் இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வாசலில் மனுக்களை பெறுவதற்காக தனி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. மனு கொடுக்க வரக்கூடிய மக்களை வெளியில் வைத்து அங்குள்ள ஏட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மனுக்களை பெற்று அங்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
இப்பொழுது கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக முடிவுக்கு வந்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. ஆதலால், கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு வாசலில் அமைக்கப்பட்டிருந்த கோரோனா கூடாரம் நேற்று முறைப்படி அப்புறப்படுத்தப்பட்டது. ஆதலால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இனி நேரடியாக உள்ளே சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்து மனு கொடுக்க ஏதுவாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் உக்கிரமாக தாக்கிய நிலையில், கோவையில் தமிழகத்திலேயே அளவுக்கு அதிகமான எண்ணிக்கை காணப்பட்டது. அதனால் அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொரோனா சிகிச்சை அளிக்க தங்களுடைய இடங்களை கொடுத்து உதவினார். சமூக சேவை அமைப்பினர் தங்களுடைய திருமண மண்டபங்கள் உட்பட அரசு கலைக் கல்லூரிகள், கொடிசியா வளாகம், ரயில் பெட்டிகள் என அனைத்தும் கொரோனா உடைய சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.
இதனால் கோவையில் பல்வேறு விதமான அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தது. இதுபோக கஷ்டப்படக் கூடிய மக்களிலிருந்து உயர்பதவியில் இருக்கக்கூடியவர்கள் வரை கூட கொரோனா விட்டுவைக்கவில்லை. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்கள் இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வாசலில் மனுக்களை பெறுவதற்காக தனி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. மனு கொடுக்க வரக்கூடிய மக்களை வெளியில் வைத்து அங்குள்ள ஏட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மனுக்களை பெற்று அங்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
இப்பொழுது கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக முடிவுக்கு வந்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. ஆதலால், கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு வாசலில் அமைக்கப்பட்டிருந்த கோரோனா கூடாரம் நேற்று முறைப்படி அப்புறப்படுத்தப்பட்டது. ஆதலால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இனி நேரடியாக உள்ளே சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்து மனு கொடுக்க ஏதுவாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.