கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடத்தை இடிக்கும் போது மேற்கூரையில் இருந்து விழுந்த கிராம உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடத்தை இடிக்கும் போது மேற்கூரையில் இருந்து விழுந்த கிராம உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் கள்ளு மேடு என்ற இடத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக ரீதியாக கட்டடங்கள் கட்டி ஒரு வருடங்களுக்கு மேலாக உபயோகித்து வந்தார்.
இந்தநிலையில், அப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் தேர்வு செய்தனர்.

ஆனால், தங்கவேல் அந்த நிலத்தை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்று கோவை மாவட்ட துணை ஆட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

வணிக ரீதியாக அந்த அரசு நிலத்தை தங்கவேல் உபயோகித்து வந்ததால் அப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தை இன்று வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளி மீட்டனர்.
அப்போது அங்கிருந்த கட்டடத்தின் மேல் கூரையில் ஏறி நின்று ஓட்டைப் பிரிக்கச் சென்ற கிராம உதவியாளர் சண்முகம் ஓடு உடைந்தால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர், அங்கிருந்த வருவாய்த் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் கள்ளு மேடு என்ற இடத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக ரீதியாக கட்டடங்கள் கட்டி ஒரு வருடங்களுக்கு மேலாக உபயோகித்து வந்தார்.
இந்தநிலையில், அப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் தேர்வு செய்தனர்.
ஆனால், தங்கவேல் அந்த நிலத்தை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்று கோவை மாவட்ட துணை ஆட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
வணிக ரீதியாக அந்த அரசு நிலத்தை தங்கவேல் உபயோகித்து வந்ததால் அப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தை இன்று வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளி மீட்டனர்.
அப்போது அங்கிருந்த கட்டடத்தின் மேல் கூரையில் ஏறி நின்று ஓட்டைப் பிரிக்கச் சென்ற கிராம உதவியாளர் சண்முகம் ஓடு உடைந்தால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர், அங்கிருந்த வருவாய்த் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.