கோவை: வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றின் ஓரத்தில் உள்ள அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம், டோபி காலனி பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், புதுத் தோட்டம் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் காமராஜர் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை வருவாய்த்துறையினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்துள்ளனர்.
மேலும், நகராட்சி சார்பில் வானத்தில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 1077 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர் அலைபேசி எண் 9445000577க்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றின் ஓரத்தில் உள்ள அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம், டோபி காலனி பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், புதுத் தோட்டம் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் காமராஜர் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை வருவாய்த்துறையினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்துள்ளனர்.
மேலும், நகராட்சி சார்பில் வானத்தில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 1077 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர் அலைபேசி எண் 9445000577க்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.