கோவை: கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன பாடலுக்கு நடனமாடிய நோயாளியை மகிழ்விக்கும் நர்ஸின் வீடியோ வைரல் ஆனதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன பாடலுக்கு நடனமாடிய நோயாளியை மகிழ்விக்கும் நர்ஸின் வீடியோ வைரல் ஆனதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அச்சத்தைப் போக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும், யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் செவிலியர்கள் நடனமாடி அவர்களது மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார். நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைத்து வருகிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் அந்த நர்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அச்சத்தைப் போக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும், யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் செவிலியர்கள் நடனமாடி அவர்களது மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார். நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைத்து வருகிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் அந்த நர்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.