கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் காந்தி சிலை சிக்னல் பகுதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாது. சைக்கிளில்தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதை, உணர்த்தும் வகையில் சைக்கிள்களில் மார்க்கெட் ரோடு, ராஜா மில் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.
பின்னர், திருவள்ளுவர் திடலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் காந்தி சிலை சிக்னல் பகுதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாது. சைக்கிளில்தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதை, உணர்த்தும் வகையில் சைக்கிள்களில் மார்க்கெட் ரோடு, ராஜா மில் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.
பின்னர், திருவள்ளுவர் திடலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.