கோவை: தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதற்கு கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதற்கு கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும் பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் அவர்களாலும் பண்படுத்தப்பட்ட மாநிலமாகும்.
பிரிவினை வாத சக்திகள் தமிழகத்திலுள்ள கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது கண்டனத்துக்குரியதாகும்.
அமைதியும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தும் விஷம திட்டத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.
அனைத்து வகையான தொழில்களும், செழிப்பான விவசாயமும், சிறந்த மருத்துவ கட்டமைப்பும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ள மேற்கு மாவட்ட மக்களிடம் பிரிவினைவாத திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக தூவப்படும் இந்த விஷம விதைகளை அரசியல், கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் முறியடிப்பார்கள்'' என கோவை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும் பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் அவர்களாலும் பண்படுத்தப்பட்ட மாநிலமாகும்.
பிரிவினை வாத சக்திகள் தமிழகத்திலுள்ள கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது கண்டனத்துக்குரியதாகும்.
அமைதியும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தும் விஷம திட்டத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.
அனைத்து வகையான தொழில்களும், செழிப்பான விவசாயமும், சிறந்த மருத்துவ கட்டமைப்பும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ள மேற்கு மாவட்ட மக்களிடம் பிரிவினைவாத திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக தூவப்படும் இந்த விஷம விதைகளை அரசியல், கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் முறியடிப்பார்கள்'' என கோவை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.