கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரிப்பு... தமிழக எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு..!

கோவை: கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீரப்பகவுண்டனூர் தமிழக எல்லைப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீரப்பகவுண்டனூர் தமிழக எல்லைப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் கேரளாவிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்களைத் தீவிர சோதனை செய்து, இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதித்தனர்.



மேலும், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை மீண்டும் கேரளப் பகுதிக்குள் திருப்பி அனுப்பினர்.

இதனிடையே தமிழக கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வர இ-பாஸ் நடைமுறையால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே, எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...