கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கடை முன்பு நிறுத்தி வைத்த மினிடோர் ஆட்டோ திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கடை முன்பு நிறுத்தி வைத்த மினிடோர் ஆட்டோ திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் வசிப்பவர் செல்வேந்திரன் (51). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலைபுதூர் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் சொந்தமாக மினிடோர் ஆட்டோவும் வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் இரும்புக்கடை முன்பு தனது மினிடோர் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிடோர் ஆட்டோ இல்லாததால் அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன் பல இடங்களில் தேடி பார்த்தும் மினிடோர் ஆட்டோ கிடைக்கவில்லை.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் செல்வேந்திரன் இன்று காலை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் வசிப்பவர் செல்வேந்திரன் (51). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலைபுதூர் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் சொந்தமாக மினிடோர் ஆட்டோவும் வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் இரும்புக்கடை முன்பு தனது மினிடோர் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிடோர் ஆட்டோ இல்லாததால் அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன் பல இடங்களில் தேடி பார்த்தும் மினிடோர் ஆட்டோ கிடைக்கவில்லை.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் செல்வேந்திரன் இன்று காலை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.