கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான பகுதியில் பகல் நேரத்தில் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்றதால் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான பகுதியில் பகல் நேரத்தில் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்றதால் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
கோவை கணபதி சத்தி சாலை, எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடியது. இந்நிலையில், இன்று காலை அந்த பகுதியில் டெஸ்டூல் பாலம் இறக்கம் மற்றும் சங்கனூர் சாலை சந்திப்பு, சத்தியமங்கலம் சாலை அந்த பகுதியில் உள்ள சிக்னல் புதியதாக பொருத்தப்பட்டது.
இதனையடுத்து, நடு ரோட்டில் அவர்கள் ஏணி அமைத்து பழைய சிக்னலை கழட்டிவிட்டு புதிய சிக்னலை பணியாளர்கள் மாற்றினார். காலை நேரம் பீக் அவர்ஸ் என்பதால் இரண்டு புறங்களிலும் இருந்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்குச் செல்ல கூடியவர்கள் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற பணிகளை இரவு நேரங்களில் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த புதிய சிக்னல் அமைக்கும் பணியின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை கணபதி சத்தி சாலை, எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடியது. இந்நிலையில், இன்று காலை அந்த பகுதியில் டெஸ்டூல் பாலம் இறக்கம் மற்றும் சங்கனூர் சாலை சந்திப்பு, சத்தியமங்கலம் சாலை அந்த பகுதியில் உள்ள சிக்னல் புதியதாக பொருத்தப்பட்டது.
இதனையடுத்து, நடு ரோட்டில் அவர்கள் ஏணி அமைத்து பழைய சிக்னலை கழட்டிவிட்டு புதிய சிக்னலை பணியாளர்கள் மாற்றினார். காலை நேரம் பீக் அவர்ஸ் என்பதால் இரண்டு புறங்களிலும் இருந்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்குச் செல்ல கூடியவர்கள் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற பணிகளை இரவு நேரங்களில் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த புதிய சிக்னல் அமைக்கும் பணியின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.