கோவை: கோவையில் செல்போனுக்கு தவணை பணம் கட்டாத தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் செல்போனுக்கு தவணை பணம் கட்டாத தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.
கோவை அருகே செல்போன் வாங்கிய தூய்மைப் பணியாளர் தவணைத் தொகை கட்டாததால் தனது உறவினர் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினரை கைது செய்தனர்.
துடியலூர் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் ஜான் (25). தூய்மைப் பணியாளரான இவர், அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் தவணை முறையில் பணம் செலுத்துவதாக கூறி ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கினார்.
அப்போது, செல்போன் கடையில் தனது உறவினர் ராஜ்குமார் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், ஜான் இரண்டு மாதமாக தவணைத் தொகையை செலுத்தவில்லை. இதனால் செல்போன் கடைக்காரர் ராஜ்குமாரை தொடர்புகொண்டு தவணைத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார், ஜான் மனைவியிடம் முறையிட்டுள்ளார். இதனை அறிந்த ஜான், ராஜ் குமார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அருகே செல்போன் வாங்கிய தூய்மைப் பணியாளர் தவணைத் தொகை கட்டாததால் தனது உறவினர் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினரை கைது செய்தனர்.
துடியலூர் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் ஜான் (25). தூய்மைப் பணியாளரான இவர், அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் தவணை முறையில் பணம் செலுத்துவதாக கூறி ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கினார்.
அப்போது, செல்போன் கடையில் தனது உறவினர் ராஜ்குமார் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், ஜான் இரண்டு மாதமாக தவணைத் தொகையை செலுத்தவில்லை. இதனால் செல்போன் கடைக்காரர் ராஜ்குமாரை தொடர்புகொண்டு தவணைத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார், ஜான் மனைவியிடம் முறையிட்டுள்ளார். இதனை அறிந்த ஜான், ராஜ் குமார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.