முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு எதிரொலி: கோவையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நள்ளிரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நள்ளிரவே மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இயல்பாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...