கோவை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்கே சிகிச்சை முடிந்த பிறகு சென்னை திரும்பியதையடுத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை ஜூலை 12ம் தேதி சந்திப்பதாக அறிவித்தார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததற்கு பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் என்பதால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஜினிகாந்த் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்கே சிகிச்சை முடிந்த பிறகு சென்னை திரும்பியதையடுத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை ஜூலை 12ம் தேதி சந்திப்பதாக அறிவித்தார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததற்கு பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் என்பதால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஜினிகாந்த் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.