கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சிறுமி குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சிறுமி குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை சுகுணாபுரம் இட்டேரி வீதியைச் சேர்ந்தவர் பரத் கிருஷ்ணா (20) செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள 13 வயது சிறுமி குளிப்பதை அடிக்கடி எட்டிப்பார்த்து உள்ளார். இதனை சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரத் கிருஷ்ணாவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் வாலிபர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் தாய் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரணை நடத்தி, பரத் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
இதனிடையே, சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த பரத் கிருஷ்ணாவை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத்தொடர்ந்து, வாலிபரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சுகுணாபுரம் இட்டேரி வீதியைச் சேர்ந்தவர் பரத் கிருஷ்ணா (20) செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள 13 வயது சிறுமி குளிப்பதை அடிக்கடி எட்டிப்பார்த்து உள்ளார். இதனை சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரத் கிருஷ்ணாவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் வாலிபர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் தாய் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரணை நடத்தி, பரத் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
இதனிடையே, சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த பரத் கிருஷ்ணாவை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத்தொடர்ந்து, வாலிபரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.