கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் கிரண்குமார் (21) ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய நண்பர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

அப்போது, நண்பரை சந்திக்க சென்ற கிரண்குமாருக்கு அங்கு வேலை செய்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கிரண்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை தன்னுடைய மகளை அழைத்து வர மில்லுக்கு சென்றார். பின்னர் மகளை அழைத்துக்கொண்டு கோவை ரயில் நிலையம் வந்தார். அங்கு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், கிரண்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கடந்த 9ம் தேதி ஒரு கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெள்ளை கோயிலுக்குச் சென்று சிறுமியையும் ஆம்புலன்ஸ் டிரைவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கிரண் குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவிநாசி சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...