கேரளாவில் ஜிகா வைரஸ் எதிரொலி... பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு..!

கோவை: கேரளாவில் ஜிகா வைரஸ் எதிரொலியாக பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் குழுவினர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கேரளாவில் ஜிகா வைரஸ் எதிரொலியாக பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் குழுவினர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அதேவேளையில், ஜிகா வைரஸ் பரவி வருவதால், 15-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கேரளாவில் இருந்து ஏராளமானவர்கள் தினந்தோறும் கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து ஜிகா வைரஸ் பரவல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



பொள்ளாச்சியை அடுத்து கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட 7 வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் போலீஸார் ஏற்கெனவே கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இ-பதிவு இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். கூடுதலாக ஊராட்சி மன்ற ஊழியர்களும் தணிக்கை செய்து வருகின்றனர்.

ஜிகா வைரஸ் பரவல் கேரளாவில் அதிகரித்து வருவதால் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவக்குழுவினரை அமைத்து முறையாக கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...