கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் பருமழையின் காரணமாக கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் பருமழையின் காரணமாக கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது.
கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள இந்த சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் இந்த அணையில் 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து 878 மீட்டர் உயரத்தில் இந்த அணை உள்ளது. இந்த அணையில் 650 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்கலாம்.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த சில நாட்களாக வால்பாறை, ஆழியாறு, சின்கோனா, மாநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் நன்றாக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஜூன் மாதம் 25 அடி வரை உயர்ந்து பின் 20 அடி வரை நீர்மட்டம் சரிந்தது. தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
தற்போது அணையில் இருந்து மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள இந்த சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் இந்த அணையில் 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து 878 மீட்டர் உயரத்தில் இந்த அணை உள்ளது. இந்த அணையில் 650 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்கலாம்.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த சில நாட்களாக வால்பாறை, ஆழியாறு, சின்கோனா, மாநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் நன்றாக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஜூன் மாதம் 25 அடி வரை உயர்ந்து பின் 20 அடி வரை நீர்மட்டம் சரிந்தது. தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
தற்போது அணையில் இருந்து மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.