கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் என மொத்தம் 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் என மொத்தம் 176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் என மொத்தம் 176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'மருத்துவமனையில் இன்று (நேற்று) பிரசவித்த தாய்மார்கள் 10 பேருக்கும், கர்ப்பிணிகள் இருவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி, 9 பேருக்கு செலுத்தப்பட்டது.

கடந்த மாதம் 17ம் தேதி முதல் இதுவரை, 102 பேருக்கு கோவிஷீல்டு, 74 பேருக்கு கோவாக்சின் என மொத்தம் 176 கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...