கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு, அக்கட்சியின் கட்டமைப்பு மாவட்ட செயலாளர் பாபு பிரகாஷ் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு, அக்கட்சியின் கட்டமைப்பு மாவட்ட செயலாளர் பாபு பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
எனவே, மத்திய மாநில அரசுகள் மனமிறங்கி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
எனவே, மத்திய மாநில அரசுகள் மனமிறங்கி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.