கோவையில் மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, 16 கிராமங்களில் இருந்து,
355 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 5 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 120 பேரிடம் இருந்து 30 ஏக்கர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை-பாலக்காடு சாலையில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வந்துதான் தற்போது செல்ல வேண்டியது உள்ளது. இதன்காரணமாக மாநகரில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதேபோல், ஊட்டியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் மாநகருக்குள் வருகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை கட்டுமான பணி, 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், முதற்கட்டமாக கோவை-பாலக்காடு சாலையில் மைல்கல் பகுதியில் ஆரம்பித்து பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இதுவரை 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேலும் 40 பேருக்கு ரூ.5 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும்.
இதனை அடுத்து சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், பன்னிமடை வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து நஞ்சுண்டாபுரம், குரும்பபாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் கட்டமாகவும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, 16 கிராமங்களில் இருந்து,
355 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 5 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 120 பேரிடம் இருந்து 30 ஏக்கர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை-பாலக்காடு சாலையில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வந்துதான் தற்போது செல்ல வேண்டியது உள்ளது. இதன்காரணமாக மாநகரில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதேபோல், ஊட்டியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் மாநகருக்குள் வருகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை கட்டுமான பணி, 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், முதற்கட்டமாக கோவை-பாலக்காடு சாலையில் மைல்கல் பகுதியில் ஆரம்பித்து பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இதுவரை 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேலும் 40 பேருக்கு ரூ.5 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும்.
இதனை அடுத்து சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், பன்னிமடை வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து நஞ்சுண்டாபுரம், குரும்பபாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் கட்டமாகவும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.