கோவையில் தள்ளுவண்டி நடைபாதை வியாபாரி சாப்பிட்ட சமோசாவில் விஷ வண்டு..! உணவுத்துறை ஆய்வு செய்ய கோரிக்கை!

கோவை: கோவையில் தள்ளுவண்டி நடைபாதை வியாபாரி சாப்பிட்ட சமோசாவில் விஷ வண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் தள்ளுவண்டி நடைபாதை வியாபாரி சாப்பிட்ட சமோசாவில் விஷ வண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பகுதியில் மொத்தமாக சமோசா தயார் செய்து அனைத்து டீ கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் நடைபாதைகள் மற்றும் தள்ளுவண்டி காய்கறி வியாபாரிகள் ஆங்காங்கே நின்று வியாபாரம் செய்வது வழக்கம். இவர்கள் கடையை விட்டுவிட்டு, டீ கடை சென்று சாப்பிட வாய்ப்பிருக்காது. ஆதலால் கேன் மூலமாக வரக்கூடிய டீ சாப்பிட்டுவிட்டு அவர்கள் விற்பனை செய்யும் சமோசாக்களை வாங்கி உண்பது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காந்திபுரம் 1ம் நம்பர் பகுதியில் தள்ளுவண்டி காய்கறி வியாபாரி ஒருவர் தன்னிடம் வாடிக்கையாக வந்து டீ, சமோசா விற்பனை செய்யும் சண்முகம் என்பவரிடம் சமோசாவை வாங்கி ஒரு கடி கடித்தார்.



அப்போது, சமோசாக்குள் கருப்பு நிற விஷ வண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்முகத்தை கூப்பிட்டார். அவர் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தார். இதை உடனே தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவையில் கடைகளில் மாவட்ட உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வு செய்கின்றன. ஆனால், இது போல ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சமோசாக்களை மொத்தமாக தயாரித்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய இதுபோன்ற ஆசாமிகள், தரமற்ற உணவுகளை விற்பனை செய்கின்றனர்.

ஆதலால், மக்களுடைய உயிர் பறி போனால் என்ன செய்வது..... உடனடியாக உணவுத்துறை தலையிட்டு மொத்த சமோசா மற்றும் வடை தயாரித்து சில்லறை விற்பனை கடைகளில் வழங்கக்கூடிய மொத்த வியாபாரிகளிடம் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...