கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யாவுக்கும், செல்வம் என்பருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சூர்யா தனது அண்ணன் கார்த்தியிடம் தன்னை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியது குறித்து கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் முடிவில்லாமல் வளர்ந்து வந்த நிலையில், நேற்று உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மதுபோதையில் இருந்த கார்த்தியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேர் தாக்கியுள்ளனர்.



அப்போது, செல்வம் தான் வைத்து இருந்த அரிவாளை கொண்டு கார்த்தியை சரமாரியாக வெட்டியதுடன் தப்பியோடியுள்ளார்.



இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த கார்த்தியை அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் தப்பியோடிய செல்வம் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...