ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

கோவை: ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தப்படி சட்டரீதியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


கோவை: ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தப்படி சட்டரீதியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில், தன்னார்வலர்கள் வழங்கிய 35 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.



இதில் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு பொருட்களை வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று, கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்புப் பணியை, முதல் பணியாக முதல்வர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.



தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிர்வாக ரீதியான செயல்பட தொடங்கியுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

ஆகவே, இதுகுறித்து, நேரடியாக அணைகளை ஆய்வு செய்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடித்தவுடன் ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் உள்ளது. சட்ட ரீதியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...