பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர் சேகருக்கு ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் சவால்..!

கோவை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்ப பாடமாக தமிழ் மொழி இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் சவால் விட்டுள்ளார்.


கோவை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்ப பாடமாக தமிழ் மொழி இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் சவால் விட்டுள்ளார்.

‘‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்ப பாடமாக தமிழ் மொழி இன்றும் உள்ளது. இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும்.'' என பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், ம.தி.மு.க ஈஸ்வரன் இதுகுறித்து கூறியதாவது, ‘‘இன்று 1 மணிக்கு கோவை புலியகுளத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வாருங்கள். அந்தப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுகிறேன்.

நீங்கள் சொன்னது போல தமிழ் ஒரு பாடமாக இல்லை எனில் சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை ஒரு பாடமாக கொண்டு வர தாங்கள் தயாரா? கோவை புலியகுளத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை ஆங்கிலமும் இந்தியும் மொழிப்பாடமாக உள்ளது.

அதன் பின்பு 6, 7, 8-ஆம் வகுப்புகளில் சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இவைகளுக்கு மட்டுமே தேர்வு உண்டு. அதன்பின்பு, 9, 10 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழ் பாடம் குறித்து குறிப்பிடப்படுவதில்லை.

மாணவர்கள் விரும்பினால் தற்காலிக ஆசிரியரை வைத்து தமிழ் சொல்லித்தரப்படும். அதுவும் ஆசிரியர் கிடைப்பதை பொறுத்துதான். இதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? எனவும் தெரிவிக்கவும். இதுதான் நிலை.

அதனால், இன்று SR சேகர் அவர்கள் மதியம் 1 மணிக்கு புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்தால் இருவரும் விசாரித்து விட்டு நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல் சம்ஸ்கிருதத்திற்கு பதில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டுவர ஒன்றிய தலைமை அமைச்சர் அவர்களிடம் தமிழக பாஜக சார்பாக கோரிக்கை வைத்து நிறைவேற்றித் தர வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...