கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என 100 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என 100 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது;
நம் எல்லோருடைய விருப்பமும், மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான். ஒருவேளை வந்தால், அதை தடுக்க மருத்துவர்கள்
தயாராக உள்ளனர். தற்போது, 18 வயது முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், குழந்தைகளுக்கு என 170 படுக்கைகள் தயாராக உள்ளன.
குறிப்பாக அதில், 100 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டது. மூன்றாவது அலை வந்தால் நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். அதை தடுக்கும் பொறுப்பு, பொதுமக்களுக்கு தான் அதிகம் உள்ளது. காரணம் மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தடுப்பு முறைகளை பின்பற்றி, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் கூறினார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது;
நம் எல்லோருடைய விருப்பமும், மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான். ஒருவேளை வந்தால், அதை தடுக்க மருத்துவர்கள்
தயாராக உள்ளனர். தற்போது, 18 வயது முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், குழந்தைகளுக்கு என 170 படுக்கைகள் தயாராக உள்ளன.
குறிப்பாக அதில், 100 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டது. மூன்றாவது அலை வந்தால் நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். அதை தடுக்கும் பொறுப்பு, பொதுமக்களுக்கு தான் அதிகம் உள்ளது. காரணம் மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தடுப்பு முறைகளை பின்பற்றி, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் கூறினார்.