கோவை: வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கோவை: வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், கனமழையின் காரணமாக வால்பாறை அருகே குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகரில் முத்துப்பாண்டி என்பவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டின் சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், வீட்டின் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எப்பொழுது இடிந்துவிழும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், கனமழையின் காரணமாக வால்பாறை அருகே குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகரில் முத்துப்பாண்டி என்பவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டின் சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், வீட்டின் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எப்பொழுது இடிந்துவிழும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.