கோவை சிங்காநல்லூரில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவையில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்து கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமியாபுரதைச் சேர்ந்தவர் வெங்கடசாமி, இவரது மனைவி ருக்குமணி(72). அவர் நேற்று காலை தனது வீட்டு முன்பு நின்று பூப்பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சாமி கும்பிட எங்கள் வீட்டிற்கு செம்பருத்திப்பூ வேண்டுமென கேட்டார். இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி பூக்களை பறித்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். உடனே அந்த வாலிபர் பூக்களை நழுவ விடுவது போல பூக்களை கீழே போட்டார். அதை எடுக்க அந்த மூதாட்டி கீழே குனிந்தார்.

அப்போது பாட்டி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து பாட்டி அலறவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து திருடர்களை விரட்டினர். அதற்குள்ளாக அவர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர்.

பின்னர், இதுகுறித்து மூதாட்டி சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...