மருத்துவமனை நிர்வாகம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கோவை: மருத்துவமனை நிர்வாகம் 10 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: மருத்துவமனை நிர்வாகம் 10 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் காளப்பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராமாத்தாள் பாட்டி தனது மூன்று தலைமுறை வாரிசுகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



தனது குடும்பத்திற்கு சொந்தமான 1.5 ஏக்கர் பாரம்பரிய சொத்துகளை KMCH மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.



இதுகுறித்து பேசிய ராமாத்தாள் பாட்டியின் பேரன் கார்த்திக், “kmch மருத்துவமனை நிர்வாகம் இதேபோன்று பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இது குறித்து ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறைகேடுகளை தனிநபர் நீதிபதி நியமித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும்'' என கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...