கோவை: வால்பாறையில் தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி, தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி, தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக வால்பாறை பகுதியில் மழையும் வெய்யிலும் மாறி மாறிய சீதோசன நிலை நிலவியதால் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து அதிகரித்துள்ளது.
தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி உள்ளது. 30 தொழிலாளர்கள் செய்யக்கூடிய பணியை ஐந்து தொழிலாளர்கள் செய்து முடிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் நவீன இயந்திரங்களைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடுத்த தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக வால்பாறை பகுதியில் மழையும் வெய்யிலும் மாறி மாறிய சீதோசன நிலை நிலவியதால் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து அதிகரித்துள்ளது.
தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி உள்ளது. 30 தொழிலாளர்கள் செய்யக்கூடிய பணியை ஐந்து தொழிலாளர்கள் செய்து முடிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் நவீன இயந்திரங்களைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடுத்த தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.