கேரளாவில் இருந்து மது வாங்க தமிழகம் வரும் குடிமகன்களால் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம்..!

கோவை: கேரளாவில் இருந்து மது வாங்க தமிழகம் வரும் குடிமகன்களால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கோவை பொதுமக்கள் வேதனையடைகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து மது வாங்க தமிழகம் வரும் குடிமகன்களால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கோவை பொதுமக்கள் வேதனையடைகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் இல்லாத மாவட்டமாக இருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள சூழலில், கோவை மாவட்டத்தில் மது கடைகள், நகை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியது. கோவை மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

தற்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்துள்ளதால் தளர்வுகளை நீக்கி கடும் கட்டுப்பாட்டை அம்மாநில மக்களுக்கு கேரள அரசு விதித்துள்ளது.



இதனால், பாலக்காடு மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள தமிகத்தின் கோவை மாவட்டத்தில் கேரள மாநில குடிமகன்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு வரும் கோவை மாவட்டம் மீண்டும் நோய் பரவலுக்கு ஆளாகும் சூழல் உருவாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



தமிழக கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, பாலக்காடு இடையே சுமார் ஆறு வழித்தடங்கள் உள்ளது. எனவே, கேரளாவில் இருந்து மது வாங்க வருபவர்கள் சுலபமாக தமிழகத்திற்குள் நுழைந்து மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும். எனவே, இதை கருத்தில் கொண்டு தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் இந்த ஆறு வழி தடத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனையின் அடிப்படையில் அங்கிருந்து வரும் வாகனங்களை அனுப்பினால் நோய் பரவும் நிலையை தடுக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...