கோவை அருகே லாரி மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் பலி..!

கோவை: கோவை அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவை அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்.

கோவை அருகே லாரி மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் பலியானார். மகளுக்கு பள்ளியில் கட்டணம் செலுத்திவிட்டு திரும்பியபோது இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- “கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர், கிருஷ்ணா நகர், பகுதியைச் சேர்ந்தவர் பிரபு வயது 33, இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஹேமப்பிரியா 28, இவர்களுக்கு தன்வி(4), என்ற மகள் உள்ளார்.

இந்தநிலையில், பிரபு தனது மகளை கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள ஒரு இண்டர்நேஷனல் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக நேற்று கல்விக்கட்டணம் செலுத்த பள்ளிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கட்டணத்தை கட்டி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அவர் கணுவாயிலிருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பின்னால் வந்த லாரி பிரபு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் லாரி மோதி கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...