கோவை: கோவை அன்னூர் அருகே நிலத்தகராறில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்ததில் காயம் அடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை அன்னூர் அருகே நிலத்தகராறில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்ததில், காயம் அடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் சந்தோஷ் வயது 25, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமியின் மகன் ரஞ்சித் குமார் 26, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று சந்தோஷ் பிரச்சனைக்குரிய நிலத்தின் வழியாக சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கண்ட ரஞ்சித்குமார் சந்தோசை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் சந்தோஷ் வயது 25, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமியின் மகன் ரஞ்சித் குமார் 26, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று சந்தோஷ் பிரச்சனைக்குரிய நிலத்தின் வழியாக சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கண்ட ரஞ்சித்குமார் சந்தோசை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.