கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை ஆரம்பத்திலேயே தடுக்க சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.
கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை ஆரம்பத்திலேயே தடுக்க சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள கோவை அரசு மருத்துவமனைகளில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலையின் தீவிரத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்தநிலையில், கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், குறிப்பாக சிறுவா்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்து வருகின்றனா். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவையில் அனைத்து அரசு மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு, குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் கொள்முதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள கோவை அரசு மருத்துவமனைகளில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலையின் தீவிரத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்தநிலையில், கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், குறிப்பாக சிறுவா்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்து வருகின்றனா். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவையில் அனைத்து அரசு மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு, குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் கொள்முதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.