கோவை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழிய வேண்டி முனீஸ்வரன் கோயிலில் அதிமுக நகர கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழிய வேண்டி முனீஸ்வரன் கோயிலில் அதிமுக நகர கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழியவும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும் வால்பாறை அதிமுக நகர கழகம் சார்பில் சோலையார் எஸ்டேட் அருகே உள்ள முனீஸ்வரன் கோயிலில் கிடாவெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பூஜைக்குப் பின், அசைவ உணவு அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மயில் கணேசன், துணை செயலாளர் பொன் கணேஷ், சரவணன், வழக்கறிஞர் R.R.பெருமாள், எஸ்.கே.எஸ்.பாலு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.